ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் : கடலில் இறங்கி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு
Aug 17 2019 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தவுள்ளதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார்.