நாகர்கோவிலில் குடியிருப்பு பகுதி அருகே திறக்கப்படவுள்ள மதுக்கடை : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
Aug 17 2019 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குடியிருப்பு பகுதி அருகே மதுக்கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலை அடுத்த கோவில்விளை பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடை அமைவுள்ள பகுதியில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கும் என கூறி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.