ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் - மனித உரிமைகள் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்
Aug 18 2019 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மீது, காவல் அதிகாரி வருண்குமார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மனித உரிமைகள் ஆணையமும், நீதிமன்றமும் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மீது, காவல்துறை அதிகாரி வருண்குமார் தாக்குதல் நடத்தியதற்கு, எஸ்.டி.பி.ஐ தேசிய துணை தலைவர் திரு.தெஹலான் பாகவி, அமைச்சர் திரு.ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.