ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது, காவல் அதிகாரி வருண்குமார் நடத்திய தாக்குதலுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தவறு செய்தவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்
Aug 17 2019 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது, காவல்துறை அதிகாரி வருண்குமார் நடத்திய தாக்குதலுக்கு கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காஞ்சி அத்திவரதர் தரிசன நிறைவு நாளில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சந்திரசேகர் மீது வருண்குமார் ஐ.பி.எஸ் தாக்குதல் நடத்தி, கேமராவை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறையினருக்கு வழிகாட்டியாக திகழ வேண்டிய ஐ.பி.எஸ் அதிகாரியே, ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது - சமீப காலமாக தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதாகவும், இனியும் இது தொடராதபடி, தவறு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.