காஞ்சிபுரம் அத்திவரதர் வழிபாட்டில் காவல்துறையினர் அத்துமீறல் - செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தி காமிராவை உடைத்து அராஜகம்
Aug 17 2019 8:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின்போது, ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது, காவல் துறையினர் அத்துமீறி அராஜக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த 47 நாட்களாக அத்திவரதர் வைபவம், காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்று, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த ஜெயா தொலைக்காட்சி செய்தியாளரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிவில் சப்ளைஸ் எஸ்.பி. வருண்குமார், ஒருமையில் திட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை, வருண்குமார் தாக்கியதோடு, கேமராவையும் சேதப்படுத்தியுள்ளார். பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, மோசடி செய்த வழக்கில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் வருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.