என்.எல்.சி-யில் 3வது சுரங்கம் அமைக்‍கும் முயற்சிக்‍கு ராமதாஸ் கண்டனம் - நிலம் கையகப்படுத்தும் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து பா.ம.க. சார்பில் வரும் 26ம் தேதி நெய்வேலியில் போராட்டம்

Dec 18 2018 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

என்.எல்.சி.யில் நிலக்‍கரி சுரங்கம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வலியுறுத்தி, வரும் 26-ம் தேதி நெய்வேலியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்‍டர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் நிலங்களை வளைக்‍கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்‍களின் நலனில் அக்‍கறையற்ற என்.எல்.சி. நிர்வாகத்தின் சுரண்டல் போக்‍கு கண்டிக்‍கத்தக்‍கது என்றும், ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள நிலங்களின் பரப்பு 12 ஆயிரத்து 125 ஏக்‍கர் எனவும் குறிப்பிட்டுள்ளார். நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைக்‍கும் திட்டத்தை என்.எல்.சி. நிர்வாகமும், தமிழக ஆட்சியாளர்களும் உடனே கைவிட வேண்டும்- கோரிக்‍கையை வலியுறுத்தி வரும் 26ம் தேதி நெய்வேலி மந்தாரகுப்பத்தில் பாட்டாளி மக்‍கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00