விடுமுறை கேட்க ஆம்புலன்சில் குடும்பத்தினருடன் வந்து, நீண்ட நேரம் காத்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் - ஈரோடு அருகே பரபரப்பு
Dec 12 2018 6:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், விடுமுறை கேட்பதற்காக ஆம்புலன்சில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு - திருப்பூர் வழிதடத்தில் ஓட்டுனராக பணியாற்றும் பாபு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறை கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் விடுமுறை அளிக்க மறுத்ததால், சென்னிமலை சாலையில் உள்ள போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்துள்ளார். நீண்டநேர காத்திருப்புக்கு பிறகு விடுமுறை அளிக்க அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பாபு திரும்பி சென்றார்.