நாமக்கல் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப் பணியாற்றுவது - புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை
Dec 12 2018 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப் பணியாற்றுவது குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை பணியில் தொடர்ந்து ஈடுபடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அவைத் தலைவர் திரு. எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தீவிர களப் பணியாற்றுவது குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வது குறித்தும், 2-ம் கட்டமாக கழகத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் திரு. ஏ.சம்பத்குமார், மாநில பேரவை இணைச்செயலாளர் திரு. ஏ.பி. பழனிவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு. வி. திருப்பதி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ப. சம்பத்குமார், எம்.ஜி.ஆர் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.