கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து சோமாத்தூர் எ. சுப்பிரமணி கழகத்தில் இருந்து நீக்கம் : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
Dec 12 2018 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து திரு. சோமாத்தூர் எ. சுப்பிரமணி கழகத்தில் இருந்து நீக்கப்படுவதாக கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு. சோமாத்தூர் எ. சுப்பிரமணி, இன்றுமுதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.