தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை
Dec 3 2018 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரத்து 673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி உலக சாதனை படைத்தனர்.
புதுச்சேரி நாட்டியாஞ்சலி ட்ரஸ்ட், ஸ்ரீ ரமணா பைன் ஆர்ட்ஸ் மற்றும் தாகூர் அரசு கலைக் கல்லூரி இணைந்து தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி ஒயிலாட்ட உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினர். லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஒயிலாட்ட சாதனை நிகழ்ச்சியில், ஆயிரத்து 673 ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு ஒயிலாட்டம் ஆடி சாதனை படைத்தனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் முதல்வரின் நாடாளுமன்ற செயலாளர் திரு.லட்சுமிநாராயணன், முதலமைச்சரின் டெல்லி பிரதிநிதி திரு.ஜான்குமார் ஆகியோர் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.