கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இதுவரை வராத எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடும் கண்டனம் - கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாகவும் எச்சரிக்கை
Nov 19 2018 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், கண்ணுகுடி கிராமத்தில், இதுவரை எந்தவித அடிப்படை வசதியும் செய்யாததால், எடப்பாடி பழனிசாமி வரும் போது கருப்பு கொடி காட்டுவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயலால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகள் வந்து பார்த்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள பொதுமக்கள், அரசு தங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்கள் பகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வரும் போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.