திருத்துறைப்பூண்டியில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜை முற்றுகையிட்டு மக்கள் தர்ணா - மக்களின் சரமாரி கேள்விகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அமைச்சர்கள் தப்பியோட்டம்
Nov 19 2018 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்காத பழனிசாமி அரசைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாமல் அமைச்சர்கள் தப்பியோடினர்.
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு சார்பில் இதுவரை மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திருத்துறைப்பூண்டியில் புயலால் பாதிக்கப்பட்டு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, காமராஜை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர்கள், அங்கிருந்து அவசர அவசரமாக தப்பிச்சென்றனர்.