கஜா புயல் தாக்கத்தால் மீள முடியாமல் தவிக்கும் நாகை மக்கள் - அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஏளனப் பேச்சுக்கு கடும் கண்டனம்
Nov 19 2018 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையில் புயல் பாதித்த பகுதிக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொதுமக்களிடம் ஏளனமாக பேசியுள்ளார். இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதால் கொந்தளிப்படைந்துள்ள மக்கள், அமைச்சர்களை விரட்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சேதங்களை முழுமையாக பார்வையிடாமல் திரும்பிச் செல்ல முயற்சி செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொதுமக்களை பார்த்து பாய், தலையணை கொடுங்கள், நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன் என ஏளனமாகப் பேசியுள்ளார். இந்த பேச்சு பாதிக்கப்பட்ட மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.