தமிழகம் முழுவதும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான திரு.செந்தமிழன் தலைமையில், மயிலாப்பூர் பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் பகுதி கழக செயலாளர் திரு.அர்ஜூனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் பகுதி கழகம் சார்பில், எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் திரு.எஸ்.எம்.சீனிவாசன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.எஸ்.முரளி, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் திரு.கே.எ.குப்பன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியக் கழகம் சார்பில், காக்களூர் பூங்கா நகர் பகுதியில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ. ஏழுமலை, ஒன்றிய கழக செயலாளர் திரு. வி.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் திரு.சுரேஷ், காக்களூர் ஊராட்சி கழக செயலாளர் திரு.செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்செங்கோடு வாலாரை கேட் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்டக் கழக செயலாளர் திரு.P.P.சாமிநாதன், திருச்செங்கோடு நகர செயலாளர் திரு.K.R.மாதேஸ்வரன், மாவட்ட அவைத் தலைவர் திரு.K.P.நல்லியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் R.ஹேமலதா, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு.K.P.மகேந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் திரு.S.கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திருK.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.
ஈரோடு மாநகர் மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு.பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், முத்து உடையான் பட்டியில், மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு.குணசேகரன், அன்னவாசல் ஒன்றிய கழக செயலாளர் திரு.ஏவிஎஸ்.வெள்ளைசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர்.