கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கஜ புயல் எச்சரிக்கை - சென்னையில் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Nov 13 2018 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகையிலிருந்து கஜ புயல் 790 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையை கடக்கக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.பாலசந்திரன், கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். புயல் தாக்கம் காரணமாக சென்னையில் 15ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் திரு.பாலசந்திரன் கூறினார்.