ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதிலளிக்கவும் ஆணை
Oct 17 2018 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதில் அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
பட்டாசு விற்பனையாளர் ஷேக் அப்துல்லா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆன்லைனில் வெடிபொருள் விற்பனைக்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், உரிமம் ஏதுமின்றி பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனையால் உள்நாட்டு பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஆன்லைனில் பட்டாசுகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு, வரும் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.