மக்கள் நீதி மைய கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய குழந்தை என விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, கமல்ஹாசன் பதிலடி
Oct 16 2018 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கமல்ஹாசனின் கட்சி, கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய குழந்தை என விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, தீய சக்தி என கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பெண்கள் பாதுகாப்புக்கென "ரவுத்திரம்" என்ற புதிய செயலியை மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் இன்று வெளியிட்டார். பின்னர் பேசிய கமல்ஹாசன், பெண்களின் பாதுகாப்புக் கருவியாக ரெளத்ரம் செயலி பயன்படும் என தெரிவித்தார். "மக்கள் நீதி மய்ய கட்சி ஒரு சப்பானி குழந்தையை போன்றது அது கருவிலேயே கலைக்கப்பட வேண்டும்" என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ராஜேந்திர பாலாஜியை தீய சக்தி என குறிப்பிட்டார். தொடர்ந்து, பகவத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவியை, கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டுக்காக தியாகம் செய்த தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது தவறில்லை என தெரிவித்தார்.