ஈரோட்டில் புதிதாக திறக்கப்படவுள்ள அரசு மதுபானக்கடைக்கு எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்த போலீசார்

Oct 16 2018 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு வெண்டிபாளையம் அருகே புதிதாக திறக்கப்படவுள்ள அரசு மதுபானக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்கு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகேயுள்ள வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதிப்பகுதியில் புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து, மதுபானக் கடை தங்கள் பகுதியில் திறக்க வேண்டாம் என்று மனுக்கள் அளித்தும், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் அப்பகுதியில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடப்பாடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியடைந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மக்களையும் கைது செய்வதாக காவல்துறையினர் அறிவித்தனர். அவர்களின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். அப்போது பொதுமக்கள் காவல்துறையினருக்கும், அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00