ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாவது மாடி சன்ஷேட் இடிந்து விழுந்து 5 பேர் படுகாயம் - நோயாளிகள், பொதுமக்கள் அச்சம்
Oct 16 2018 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சன்ஷேடு இடிந்து விழுந்து, 5 பேர் பலத்த காயமடைந்தனர். அரசின் அலட்சியத்தால் நடைபெற்ற இந்த விபத்தால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டாவது மாடியிலுள்ள சன்ஷேடு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில், சுதாகர், செந்தில்குமார், குமாரபாளையம், விஜயபாபு உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் அலட்சியத்தால், அரசு மருத்துவமனையில் சன்ஷேடு இடிந்து விழுந்த நிகழ்வு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை சரிவர பராமரிக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.