முன்னாள் குடியரசு தலைவர் A.P.J.அப்துல் கலாமின் உயர் எண்ணங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் : கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
Oct 15 2018 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் குடியரசு தலைவர் A.P.J.அப்துல் கலாமின் உயர் எண்ணங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் என கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் திரு. A.P.J.அப்துல் கலாமின் 87வது பிறந்தநாளையொட்டி கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தேசத்தின் எதிர்காலத்தை இளைய சமூகத்தின் கரங்கள் தாங்கி பிடித்திட வேண்டும் என்ற எழுச்சி சிந்தனையை நாடு முழுவதும் விதைத்திட்ட மாமனிதர், ஏவுகனை நாயகன், முன்னாள் குடியரசு தலைவர், டாக்டர். A.P.J.அப்துல் கலாம் என தெரிவித்துள்ள திரு டிடிவி தினகரன் A.P.J.அப்துல் கலாமின் 87வது பிறந்த நன்னாளில் அவரை வணங்கிடுவோம் என தெரிவித்துள்ளார்.
A.P.J.அப்துல் கலாம் என்ற மாமேதையின் உயர் எண்ணங்களை நம் ஒவ்வொருவம் அவரவர் வாழ்க்கையில் முன்னிறுத்திட உறுதி ஏற்போம் என்றும் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.