அறிவுசார் மையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் : அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வலியுறுத்தல்
Oct 15 2018 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அப்துல் கலாமின் கனவு திட்டமான அறிவுசார் மையத்தை உடனடியாக அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் அவரது உருவப்படத்திற்கு அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், டெல்லியிலும் தமிழகத்தில் அனைத்து தலைநகரங்களிலும் அப்துல் கலாம் அறிவியல் அறிவு சார்பு மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.