எடப்பாடி பழனிசாமிக்‍கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

Oct 13 2018 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமிக்‍கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கை, சிபிஐ விசாரிக்‍க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தமது உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு அளித்ததாகக்‍ கூறி, லஞ்ச ஒழிப்பு துறையில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகரை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரிக்கவும், மூன்று மாதங்களுக்குள் முதற்கட்ட விசாரணைகளை நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் எனவும், வழக்கு விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00