காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம்கள் : வாக்காளர்களுக்கு உதவிய கழக நிர்வாகிகள்
Sep 24 2018 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் பங்கேற்ற கழக நிர்வாகிகள், தீவிரமாக ஈடுபட்டு, வாக்காளர்களுக்கு உதவினர்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில், கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர், கன்னடபாளையம் ஜெயின் ஸ்கூல், ராமநாதபுரம் ஆகிய பள்ளிகளில், காஞ்சி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் திரு.கரிகாலன், தாம்பரம் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாக்காளர் சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு உதவினர்.
இதேபோல், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கண்ணகி நகர் 195-வது வட்டம் கழகத்தின் சார்பில் வாக்காளர் சரிபார்க்கும் பணியை, வட்ட செயலாளர் v.குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.