ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை தரகருடன் பண பேரம் நடத்திய காவல் ஆய்வாளர் - சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ பதிவு

Sep 24 2018 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை தரகருடன் காவல் ஆய்வாளர் ஒருவர் நடத்திய பண பேரம் தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆளுங்கட்சியினர் மட்டுமின்றி அதிகாரிகளும் மணல் கொள்ளையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சிக்‍கல் காவல்நிலைய ஆய்வாளரான முகம்மது நசீர் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த மணல் கொள்ளை தரகர் காளி என்பவருடன், மணல் கொள்ளை தொடர்பாக பண பேரம் நடத்தியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இதுபோன்ற மணல் பேரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்‍கது. எடப்பாடி தரப்பினரின் மோசமான ஆட்சியால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற மணல் கொள்ளைகள் அதிகஅளவில் நடைபெறுவது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00