கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்புதூரில் பிரதான ஆற்றுப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு
Sep 24 2018 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கண்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்புதூரில் உள்ள பிரதான ஆற்றுப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கண்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரம்புதூரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிக்குச் செல்லும் ஆற்றுப் பாலம் சேதமடைந்து பல மாதங்களாகியும் அதனை சீரமைக்க அரசு இதுவரை முன்வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெருவெள்ளம் ஏற்பட்டால் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தப் பாலம் வழியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல்ஆகிறது. தேர்தல் சமயத்தில் மூன்று வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க பொதுமக்கள் இந்தப் பாலம் வழியாகச் சென்றாக வேண்டும். ஆனால், தற்போது மாணவ மாணவிகள், பொதுமக்கள் பல மைல் தூரம் சுற்றி செல்கின்றனர்.