தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் - அமைச்சர்கள் கொள்ளையடிப்பதிலேயே குறியாக உள்ளனர் : டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Sep 24 2018 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாலாறு பாதுகாப்பு வாகன பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதிலே குறியாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.