மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அரசு, காவல்துறைக்கு கடும் கண்டனம் : கருணாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
Sep 24 2018 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும், தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 22ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், தேசிய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் திரு.பிரகாஷ் காரத், திரு.ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.