ஸ்டெர்லைட் ஆலை - ஓய்வுபெற்ற நீதிபதி குழு ஆய்வு- ஆய்வுக்குழுவின் முடிவு மக்கள் எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பொதுமக்கள் கோரிக்கை
Sep 24 2018 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதால், ஆய்வு குழுவின் முடிவும், மக்கள் எதிர்பார்பின் படி இருக்க வேண்டும் என மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மக்களின் தன் எழுச்சி போராட்டம் காரணமாக, கடந்த மே மாதம் 28ம் தேதி மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. இந்த குழு இரண்டு நாட்கள் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் கருத்தும் கேட்டது. அப்போது மார்க்சிஸட் கம்யூனிஸட் கட்சி மற்றும் குமாரரெட்ட்டியார்புரம் கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என மனு அளித்திருப்பதால், ஆய்வு குழு மக்கள் எதிர்பார்பினை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.