எச்.ராஜா மீது பல முறை வழக்குப்பதிவு செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு
Sep 24 2018 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எச்.ராஜா மீது பல முறை வழக்குப்பதிவு செய்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
Roll Visuals
காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அடுத்த நெடுகுன்றம் ஆலப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் பனை விதைகளை நடும் விழாவினை தொடங்கிவைத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகர் உத்தரவுப்படி தான் கைது செய்ய வேண்டும் என்றும், எச்.ராஜா மீது பல முறை வழக்கு பதிவு செய்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.