ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
Sep 24 2018 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு செய்தபோது, 95 சதவீத மக்கள் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமிர கழிவுகள் குவிக்கப்பட்டதால், தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.