நாகை மாவட்டம் புதுப்பள்ளி இடத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு : தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி மீட்டனர்
Sep 24 2018 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி, உயிருடன் மீட்டனர்.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி அருகில் உள்ள புதுப்பள்ளி என்ற இடத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க குழி தோண்டப்பட்டிருந்தது. இந்த இடத்தில் இன்று பிற்பகல் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திகேயன் - மாலா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை பிரியதர்ஷிணி, எதிர்பாராத விதமாக, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். உடனடியாக, தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களிலிருந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றில் 18 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தைக்கு, உடனடியாக குழாய்மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அருகில், குழி தோண்டி, இரண்டுமணி நேர போராட்டத்திற்குப் பின், மீட்புப்படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.