தமிழக அரசை, மத்திய பா.ஜ.க அரசு இயக்குவதாகவும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு : ரஃபேல் விமான ஊழலில் பிரதமரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டு

Sep 24 2018 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசை, மத்திய பா.ஜ.க அரசு இயக்குவதாகவும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் அறப்போர் இயக்கம் சார்பில் "என்னங்க சார் உங்க சட்டம்" என்ற பெயரில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு. பிரசாந்த் பூஷன், சமூக செயற்பாட்டாளர் திரு. அருணா ராய் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக்‍ கூட்டத்தில் பேசிய திரு.பிரசாந்த் பூஷன், தமிழகத்தை டெல்லியில் இருந்து மத்திய பா.ஜ.க. அரசு இயக்குவதாகவும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதை அறிய முடிவதாகவும், ஊழலுக்கு எதிராகவும், கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ரஃபேல் விமான வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதில் பிரதமரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டினார். இந்த ஒரு ஊழல் பாதுகாப்பு துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் திரு. பிரசாந்த் பூஷன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய, சமூக செயற்பாட்டாளர் திரு. அருணா ராய், ஊழலுக்கு எதிராகவும் அடக்குமுறைக்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00