தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியை உருவாக்கியவர் சின்னம்மா என்பதை ஆட்சியாளர்களால் மறுக்க முடியுமா? - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி

Sep 23 2018 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியை உருவாக்‍கியவர் சின்னம்மா என்பதை ஆட்சியாளர்களால் மறுக்‍க முடியுமா? என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செய்தியாளர்களுக்‍கு இன்று பேட்டியளித்த திரு. டிடிவி தினகரன், சின்னம்மாவை பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் பொறுப்பேற்கமாறு வற்புறுத்தியவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான் என்றும், அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி உருவாக்‍கித் தந்தவர் சின்னம்மா என்றும் குறிப்பிட்டார்.

மக்‍கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்று கோரி, மக்‍களை சந்தித்து வரும் தங்களுக்‍கு அமோக ஆதரவு இருப்பதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதி மக்‍கள் குக்‍கர் சின்னம் என்ற டோக்‍கனை நெஞ்சத்திலே பொருத்தியிருப்பதாகவும், இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கழகம் அமோக வெற்றி பெறும் என்றும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

தமிழகக்‍ காவல்துறை எடப்பாடி அரசின் ஏவல்துறையாக மாறிவிட்டது என்றும், ஒருசில அதிகாரிகளின் தவறுகளால், ஒட்டுமொத்த காவல்துறைக்‍கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00