திருவண்ணாமலையில் பணம் கேட்டு திமுகவினர் தாக்குதல் : மனமுடைந்த கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி
Sep 21 2018 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் தனிப்பாடியில் தி.மு.க.வினர் தாக்கியதால் மனமுடைந்த அழகு சாதன கடை உரிமையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் ராஜேஷ் என்பவர் அழகு சாதன கடை வைத்துள்ளார். அவர், திமுகவைச் சேர்ந்த பூபாலன் என்பவரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் தண்டல் பணம் கேட்டு மிரட்டி பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ராஜேஷை அவதூறு வார்த்தைகளால் திட்டியும், காலணியால் அடித்தும் பூபாலன் மற்றும் பவுன்குமார் அராஜகம் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த ராஜேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில், செல்போன் கடை ஊழியரை திமுகவினர் தாக்கினர். பிரியாணிக்கடை மற்றும் அழகு நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.