திருச்சியில் கல்லூரி மாணவர் கிஷோர்குமார் 2 கட்டை விரல்களை தரையில் ஊன்றியபடி புஷ்-அப் செய்து புதிய சாதனை
Sep 12 2018 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர் கிஷோர்குமார் தனது இரண்டு கட்டை விரல்களை தரையில் ஊன்றியபடி புஷ்-அப் செய்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
கல்லூரி மைதானத்தில் மாணவ, மாணவியர்கள் மற்றும் சாதனைபுத்தக நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் பலரது முன்னிலையில் கிஷோர்குமார், 54 வினாடிகளில் 75 புஷ்-அப்களை செய்து, இதற்கு முந்தைய சாதனையாக, ஒரு நிமிடத்தில் 65 புஷ்-அப்கள் செய்ததை முறியடித்து புதிய சாதனை படைத்தார். மாணவனின் இந்தச் சாதனை, ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.