கொச்சியில் மீனவர்கள் படகு மீது கப்பல் மோதிய விபத்து : மேலும் 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு

Aug 14 2018 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொச்சி அருகே மீனவர்கள் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்பட 14 மீனவர்கள், கடந்த ஏழாம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். முனம்பம் கடல் பகுதியில், மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதில், அப்படகு பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் 3 மீனவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். அப்போது அவ்வழியே வந்த மீனவர்கள், உயிருக்கு போரடி கொண்டிருந்த இரண்டு மீனவர்களை மீட்டனர்.

மேலும், பலியான மூன்று மீனவர்களின் உடல்களையும் கைப்பற்றி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நீரில் மூழ்கிய 9 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலியான மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. மீனவர்களை தேடும் பணிகளில் மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதாக மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00