கடலூரில் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை - 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
Aug 14 2018 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு கடலூர் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாரதிதாசன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததின் பேரில், இவ்வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி பாரதிதாசனுக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.