சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து உலக சாதனை : உப்பினால் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் ஓவியம் வரைந்து சாதனை
Aug 13 2018 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவியர் 594 பேர் இணைந்து, 11 டன் உப்பினால் 6 மணி நேரத்தில் உலகின் மிகப்பெரிய தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்தனர்.
சிவகாசியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களுக்கான உலக சாதனை நிகழ்ச்சி, கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்திய மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையில், தேசிய ஒருமைப்பாடு, இந்திய கலாசாரம், யோகா உள்ளிட்டவற்றை போற்றும் வகையில், 9 வகை உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மகாத்மா காந்திஜியின் உப்பு சத்தியா கிரகத்தை நினைவு கூறும் விதமாகவும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் விதமாக 600 பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து 11 டன் உப்பு மற்றும் 8 வண்ணங்கள், 542 கிலோ கலர் பொடிகளை கொண்டு, 31 மீட்டர் நீளம் மற்றும் 29 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய ஓவியத்தை 594 மாணவியர் 6 மணி நேரம் 4 நிமிடத்தில் வரைந்து அசத்தினர்.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இந்திய தேசிய கொடியை பிடித்து வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக மாணவ மாணவியர் வரைந்த ஓவியம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. உப்பினால் வரையப்பட்ட மிகப்பெரிய ஓவியம் இது என்பதால் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகடாமி, எலைட் உலக சாதனை நிறுவனம், இந்தியா ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.