அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு
Jul 21 2018 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள், வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்தும், சேலம், திருச்சி, சென்னை, மதுரை என நான்கு மண்டலங்களாக தொழிற்சங்க பேரவையின் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் தொழிற்சங்க பேரவையின் ஆயத்த பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில், வரும் 23-ம் தேதி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட சேலம் மண்டலத்திலும், திருச்சியில், வரும் 24-ம் தேதி கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட திருச்சி மண்டலத்திலும், சென்னையில், வரும் 25-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சென்னை மண்டலத்திலும், மதுரையில், வரும் 26-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மதுரை மண்டலத்திலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.