8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது : மக்கள் விரோத எடப்பாடி அரசின் அடக்கு முறைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
Jul 20 2018 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வதன் மூலம், மக்கள் விரோத எடப்பாடி அரசு, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், மிரட்டியும் வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் திரு. சீமான் காவல்துரையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ஜாமீனில் விடுதலையான திரு. சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மக்கள் விரோத எடப்பாடி அரசு, காவல்துறைமூலம் அவர்களை அச்சுறுத்தியும், கைது செய்தும் தொடர்ந்து மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.