டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்
Jul 20 2018 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரத் ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில், வரும் 27-ஆம் தேதி, கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய துணைக் கண்டமும், தமிழகமும், பெருமைகொள்ளும் பெருமைக்குரியவராக, உலகம் வியந்த இந்தியாவின் குடியரசுத் தலைவராக, இந்திய நாட்டின் வலிமையை எடுத்துரைத்த விஞ்ஞானியாக, நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு குறிப்பாக, ஆற்றலின் சக்தியாய் திகழும் இளைய சமூகம் தங்கள் வாழ்வில் சாதனைப் படைப்பதோடு, தேசத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிட வேண்டும் என்பதை இறுதிவரை எடுத்துரைத்த மாமனிதர், போற்றுதலுக்குரிய பாரத் ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான வரும் 27-ஆம் தேதி, காலை 11 மணியளவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள பாரத் ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாமின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.