தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை பகுதி பொதுக்‍குழு உறுப்பினர் கே.குமரசெல்வம் மறைவுக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் - பொய் வழக்‍கு புனையப்பட்டு, இரக்‍கமற்ற முறையில் நடந்துகொண்ட பழனிசாமி அரசும், காவல்துறையுமே, குமரசெல்வம் மரணத்திற்கு முழுக்‍ காரணம் என குற்றச்சாட்டு - அநியாயத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்‍கைகளை கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என டிடிவி தினகரன் உறுதி

Jul 20 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை பகுதி பொதுக்‍குழு உறுப்பினர் திரு. கே.குமரசெல்வம் மறைவுக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறையின் அடக்‍குமுறைகளுக்‍கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு, திரு. கே. குமரசெல்வம் மரணம் அடைந்தார் என்றும், இந்த ஆட்சியின் ஏவல்துறைபோல் செயல்படும் காவல்துறைக்‍கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்‍ கொள்வதோடு, இந்த அநியாயத்திற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்‍கைகளை கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை தொகுதி பொதுக்‍குழு உறுப்பினரும், மதுக்‍கூர் ஒன்றியம் பழவேறிகாடு ஊராட்சியில் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற்று 10 ஆண்டு காலம் ஊராட்சி மன்றத் தலைவராக மக்‍கள் பணியாற்றியவரும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் ஒப்பற்ற செயல்வீரருமான திரு. கே. குமரசெல்வம், பழனிசாமி அரசின் காவல்து​றையின் அடக்‍குமுறைகளுக்‍கு உள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு, மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கழகத்தின் வீறுகொண்ட செயல்வீரராக திகழ்ந்து தியாகத்திற்கும், துரோகத்திற்குமான யுத்தத்தில் தியாகத்தின் பக்‍கம் உறுதியாக நின்று, தஞ்சை தெற்கு மாவட்டக்‍ கழகத்தில் எழுச்சியோடு பணியாற்றிய ஒரே காரணத்திற்காக அவர் மீது பொய் வழக்‍கு புனையப்பட்டு, அதுதொடர்பாக அவரை கடந்த செவ்வாய்க்‍கிழமை அதிகாலையில் அவரது இல்லத்தில் காவல்துறை படையோடு​சென்று கைது செய்துள்ளனர் -

காவல்துறையினர் அச்சமயத்தில் அராஜகமாக நடந்துகொண்டதால், மிகுந்த மனவேதனை அடைந்த திரு. கே. குமரசெல்வம், காவல்துறை வாகனத்தில் ஏற்றப்படும்போது தனக்‍கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை தெரிவித்தபோதும், அதற்கு செவிசாய்க்‍காமல் இரக்‍கமற்ற முறையில் அவரை காவல்துறையினர் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர் - அவரின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் அழைத்துச் சென்றபோது, அந்த வாகனத்திலேயே மயங்கி விழுந்த அவரை, அதன் பின்னரே மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவ சிகிச்சை பயனளிக்‍காமல், நேற்று இரவு அவர் மரணமடைந்துள்ளார் - இயற்கையிலேயே மாற்றுத் திறனாளியான அவருக்‍கு ஒரு கையில்லாத குறையையும் பொருட்படுத்தாமல், மக்‍கள் பிரதிநிதியாகவும், கழக செயல்வீரராகவும், சிறந்த முறையில் பணிகளை மேற்கொண்ட அவரின் மரணத்திற்கு பழனிசாமி அரசும், காவல்துறையினருமே முழு காரணம் -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்‍கு நாள் சீரழிந்து வரும் நிலையில், அதனை தடுத்திடாமல் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் மீது தங்களின் வெஞ்சினத்தை வெளியிடும் இந்த அரசு, திரு. குமரசெல்வத்தின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மக்‍களை காக்‍கவேண்டிய பெரும் பொறுப்பை மறந்துவிட்டு கழகத்தினர் மீது வன்முறையில் பொய் வழக்‍குப் புனையும் பழனிசாமி அரசின் உத்தரவின்பேரில், இந்த ஆட்சியின் ஏவல்துறைபோல் செயல்படும் காவல்துறைக்‍கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்‍ கொள்வதோடு, இந்த அநியாயத்திற்கு எதிரான நீதிமன்ற நடவடிக்‍கைகளை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் -

கழகத்தின் ஆற்றல்மிக்‍க செயல்வீரராக செயல்பட்ட திரு. கே. குமரசெல்வத்தின் மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும் - அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்‍கும், உறவினர்களுக்‍கும், ஊராட்சி மன்றத் தலைவராக அவரை தொடர்ந்து இரண்டுமுறை தேர்ந்தெடுத்த மதுக்‍கூர் ஒன்றியம் பழவேறிகாடு ஊராட்சி ஒன்றிய பொதுமக்‍களுக்‍கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக உடன்பிறப்புகளுக்‍கும் தனது ஆழ்ந்த இரங்கலை கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00