பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - விழிப்புணர்வு முகாம் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் - விழிப்புணர்வு முகாம்கள்
Jul 20 2018 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில், மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கக் கோரியும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில், மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை - புரிதலும் பகிர்தலும்' என்ற தலைப்பில், மதுரையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குழந்தைகள் மீதான அத்துமீறல்கள், பெரும்பாலும் தெரிந்தவர்களால்தான் நடத்தப்படுகிறது என இம்முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு எவ்வளவு அவசியமோ, அதே அளவிற்கு சட்டங்களைக் கடுமையாக்குவதும் அவசியம் என இம்முகாமில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.