விருதுநகரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பலத்த காற்று : 3 ஏக்கர் பரப்பில் உள்ள வாழை மரங்கள் சாய்ந்து சேதம்
Jul 19 2018 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பலத்த காற்று வீசியதில் 3 ஏக்கர் பரப்பில் உள்ள பெரும்பாலான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம், செண்பகத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக இப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வாழைகுளம் கண்மாய் அருகே உள்ள தங்கசாமி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாருடன் சாய்ந்து சேதமானது. இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள்,
இதற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.