ஈரோடு பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் அச்சம்
Jul 19 2018 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வாய்க்கால் மூலம் குறைந்த நாட்களே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்தில் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை திகழ்கிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு வரும் வாய்க்கால் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பாசன வசதிக்காக இங்கு ஆண்டுதோறும் 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 80 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், மஞ்சள் சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள விவசாயிகள் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.