திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறிக்க முயற்சி : மர்ம நபர்களை தேடும் போலீசார்

Jul 19 2018 4:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காட்டில், சாலையில் நடந்து சென்ற பொதுமக்‍களிடம் கத்தியை காட்டி மிரட்டி சங்கிலியை பறிக்‍க முயற்சித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியில் வசித்து வரும் கவிதா மற்றும் செல்வராணி ஆகியோர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்‍கர வாகனத்தில் தலைக்‍கவசம் அணிந்து வந்த மர்மநபர்கள் இருவர், கத்தியைக்‍ காட்டி மிரட்டி நகைகளை பறிக்‍க முயன்றுள்ளனர். அவர்கள் கூச்சலிடவே கொள்ளையர்கள் தப்பியோடினர். இதேபோன்று, அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திரு. வெங்கடேஷிடம் கத்தி முனையில் பணம் பறிக்‍க முயன்றுள்ளனர். பட்டப்பகலில் அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவங்களால் அப்பகுதி மக்‍கள் பீதியடைந்துள்ளனர். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்க திடலை சேர்ந்த நகைக்‍கடை உரிமையாளர் சரவணன், நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரையிட்டு கொண்டு வருவதற்காக மதுரை சென்றுவிட்டு இருசக்‍கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, அவரை மர்ம நபர்கள் தாக்‍கி 93 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00