குன்னூரில் அன்னாசி பழங்கள் சாகுபடி செய்து சாதனை : விவசாயிகள் மகிழ்ச்சி
Jul 13 2018 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குன்னூர் காட்டேரி பூங்காவில் புதிய முயற்சியாக அன்னாசி பழங்கள் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பூங்காவிற்கு சொந்தமாக நாற்றங்கால் பண்ணை உள்ளது. இங்கு மலர் நாற்றுக்கள், தேயிலை நாற்றுக்கள் போன்றவைகள் உற்பத்தி செய்யபட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமவெளி பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யக் கூடிய அன்னாசி பழங்களை முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 1 ஏக்கர் பரப்பளவில் 500 நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த செடிகளில் தற்போது காய்கள் அதிகளவில் காய்த்துள்ளது. இந்த பழங்களை கொண்டு குன்னூர் பழப் பண்ணையில் ஜாம், ஜூஸ் போன்றவைகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதிகளவில் அன்னாசி நாற்றுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அன்னாசி பழங்கள் சாகுபடி செய்ய வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.