டெல்லி அரசை எதிர்த்து போராடி, தமிழகத்தில் ஆட்சியை நிறுவியவர் தியாகத்தலைவி சின்னம்மா என இயக்குநர் பாரதிராஜா புகழாரம் - தூத்துக்குடியில் மிருக திட்டத்தைக் கையாண்டு, மக்களைக் கொன்று குவித்தது எடப்பாடி நிர்வாகம் என குற்றச்சாட்டு
Jun 22 2018 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அரசை எதிர்த்து போராடி, தமிழகத்தில் ஆட்சியை நிறுவியவர் தியாகத்தலைவி சின்னம்மா என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தூத்துக்குடியில் மிருக திட்டத்தைக் கையாண்டு, மக்களைக் கொன்று குவித்தது எடப்பாடி நிர்வாகம் என குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியின் அதிகாரப் போக்கை எதிர்த்து சோர்வுறாமல் போராடியவர் தியாகத் தலைவி சின்னம்மா என்றும், டெல்லி அரசை எதிர்த்துப் போராடி இந்த ஆட்சியை நிறுவியவர்தியாகத் தலைவி சின்னம்மா என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக மக்களை எடப்பாடி ஏமாற்றுகிறார் - எடப்பாடி நிர்வாகத்தை மக்கள் வெறுத்து பலகாலம் ஆகிவிட்டது - தன்னிலையை உணரும் திராணி கூட இல்லாமல் எடப்பாடி நிர்வாகம் உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கடுமையாக சாடியுள்ளார். தூத்துக்குடியில் மிருக திட்டத்தைக் கையாண்டு மக்களை கொன்று குவித்தது எடப்பாடி நிர்வாகம் என குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தின் ஆட்சி டெல்லியின் கையில் சென்றுவிடாமல் தடுத்தவர் தியாகத் தலைவி சின்னம்மா என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். எடப்பாடி நிர்வாகமே நீங்கள் யார் பக்கம்? என்றும் அவர் கடும் கண்டனத்துடன் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.