மதுரையில் வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள் குண்டு வீச்சு : குண்டுவீச்சு கலாச்சாரம் தலைதூக்குகிறதோ என சமூக ஆர்வலர்கள் அச்சம்

Jun 22 2018 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள் குண்டு வீசிச்சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உலகனேரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவருக்கு, கீரைத்துறையைச் சேர்ந்த முருகவேல் உள்ளிட்ட 2 பேர் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, ராஜேஷ் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.

இதனால், வீட்டின் ஜன்னல் மற்றும் திரைச்சீலைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. சம்பவம் குறித்து புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 17-ம் தேதி, மதுரை வாழைத்தோப்பு பகுதியில், நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, எதிர்பாராத விதமாக வெடித்ததில், காயமடைந்த இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர். நாட்டு வெடுகுண்டு தயாரிப்பு, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால், மதுரையில் குண்டுவீச்சு கலாச்சாரம் தலைதூக்குகிறதோ என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00