அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில், பெருமளவு உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்கள், தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய உறுப்பினர்கள் ஏராளமானோர் கழகத்தில் இணைந்து வருகின்றனர். பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கானோர் விலகி, கழகத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
கழக பொதுச்செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப்பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் படி மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வள்ளாலபட்டி பேரூராட்சி கழகம் சார்பில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக, ஓபிஎஸ் அணி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சரவணன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இதில் பேரூர் கழக செயலாளர் திரு. ஏ.கே.உமாபதி, கழக நிர்வாகிகள் திரு. செல்வராஜ், ஒன்றிய செயலாளர் திரு.சோமாசி, அவைத்தலைவர் திரு. நாகசுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாநகர் மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூலாங்குளத்துப்பட்டியில் உறுப்பினர்சேர்க்கை முகாம் மற்றும் உறுப்பினர்சேர்க்கையினை முறைப்படுத்தும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்டகழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் கலந்துக்கொண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதில் ஓபிஎஸ்-இபிஎஸ், மற்றும் திமுகவிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டகழக பொருளாளர் திரு. திரிசங்கு, திருவெறும்பூர் ஒன்றியசெயலாளர் திரு.ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒன்றியக்கழக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் திரு.செல்வம் தலமையில் தனியார் திருமண மண்டபத்தில் கழகத்தில் வாக்காளர்களை உறுப்பினராக சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆம்பக்குடி ,மாத்தூர், மித்ராவயல், கோட்டையூர், உள்ளிட்ட பல கிராம கழக நிர்வாகிகளுக்கு படிவத்தை மாவட்ட செயலாளர் திரு. உமாதேவன் வழங்கி ஆலோசனைகள் வழங்னார். இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளார் ஊரவயல் திரு. ராமு காரைக்குடி பெருநகர செயலாளர் சாந்தி ரோடு வேஸ் திரு. சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணிகண்டம், அலுந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கழக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கழக அமைப்பு செயலாளரும் - திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன், ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பேராவூரணி திரு. தேவதாஸ், ஒன்றிய கழக செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றிய பகுதியில் உள்ள வடமாத்தூர், குலாள்பாடி, வாசுதேவன்பட்டு, மேலபுஞ்சை, நம்மியந்தல், தாமைரபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.ஆர்.தருமலிங்கம் துவக்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் புதிய உறுப்பினராக ஆர்வமுடன் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து கழகத்தில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மாதேவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழகத்தை பல படுத்துவது, அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் தே.மு.தி.க, பா.ம.க, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.